ENGINEERING ARTS & SCIENCE PHARMACY NURSING PHYSIOTHERAPY
Home About

News & Events

11th October 2023

MEGA RALLY & HUMAN CHAIN To Uphold GENDER EQUALITY

(on the Occasion of International Day of the Girl Child)

மண்ணிவாக்கம் பெரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி மற்றும் மனிதச் சங்கிலி.

பெண் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும் அவர்களது திறமைகள், படைப்புகள் அங்கீகரிக்கும் விதமாக சர்வதேச பெண் குழந்தைகள் தினம் அக்டோபர் 11-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

மண்ணிவாக்கத்தில் உள்ள பெரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்த தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுப் பேரணி பெரி கல்வி குழுமத்தின் நிறுவனத் தலைவர் மற்றும் பெரி மென்பொருள் தீர்வுகள் அமெரிக்கா, மாண்புமிகு. சரவணன் பெரியசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இப்பேரணியைத் தாம்பரம் துணை காவல் ஆணையர் திருமிகு. A. பவன் குமார் ரெட்டி IPS அவர்கள் கொடி அசைத்துத் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து 2000திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கல்லூரியிலிருந்து விழிப்புணர்வு பதாகைகள் பிடித்தவாறு பேரணியாகச் சென்று மண்ணிவாக்கம் பேருந்து நிலையம் வரை சென்றனர். பின்னர் வரிசையாக நின்று மனிதச் சங்கிலி அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் கல்லூரி முதன்மை இயக்க அலுவலர் திரு. சசிவீர ராஜன், முனைவர் அ.குணசேகரன் கல்வி சார் இயக்குநர், முனைவர் அ. புருஷோத்தம்மன் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தாம்பரம் துணை காவல் ஆணையருக்குக் கல்லூரி முதல்வர் சால்வை அணிவித்துக் கௌரவித்தார்.

© PERI 2019 - All rights reserved.